2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற, சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

Editorial   / 2018 மார்ச் 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (05)  கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் இவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்குடன், மிகவும் நூதனமான முறையில் கஞ்சாவை மறைத்து வைத்து சென்றுள்ளார்.

இவர் கொண்டு சென்ற பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிடும் போது அதிலிருந்து 100 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .