2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பொலிஸார் மீது வாள்வெட்டு: மேலும் இருவர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.நிதர்ஷன்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலும் இருவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன், கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே நேற்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை, யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .