2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாடுகளைக்கடத்திய சாரதி கைது

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு பகுதியில் இருந்து களவாடிய மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற நபர் ஒருவர் மண்டைத்தீவு சோதனை சாவடியில் வைத்து நேற்று (12) ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு பகுதிகளில் களவாடிய மாடுகளை “பட்டா" ரக வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டவேளை மண்டைதீவு பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் இருந்து கன்றுகளுடன் பசுமாடுகள் என 7 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த நபரையும் மீட்கப்பட்ட மாடுகளையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .