2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் சாரதி கைது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணத்துக்கு, கனரக வாகனமொன்றில் கடத்திச்செல்லப்பட்ட 11 முதிரை மரக்குற்றிகளை, நேற்று வியாழக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் கைப்பற்றிய மாங்குளம் பொலிஸார், வாகனத்தின் சாரதியையும்  கைது செய்துள்ளனர்

கொக்காவில் பகுதியில் வீதி பாதுகாப்பு பணியில் இருந்த  பொலிஸாரின் சமிக்ஞையை மதிக்காது, அதிவேகமாகப் பயணித்த மேற்படி கனரக வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றே பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .