Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இன்று காலையிலிருந்து, யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தெல்லிப்பளை - மருதங்கேணி, சாவகச்சேரி,பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 08 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் கூறினார்.
மேலும், குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
5 hours ago
7 hours ago