2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 12 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை இன்று (12) முதல் முன்னெடுத்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று (12) முதல், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல் உள்ளிட்ட பிரதான வாயிற் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .