2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யுவதியைக் கடத்தியவர் கைதானார்

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. மகா

யாழ். வடமராட்சி பிரேதேசத்திலுள்ள அல்வாய் வடக்கில், ஒரு மாதத்துக்கு முன்னர், வாள், பொல்லுகளுடன் முச்சக்கரவண்டியில் வந்து, யுவதியொருவரைக் கடத்திச் சென்றவரை, அல்வாய் வடக்கிலுள்ள வீட்டிலொன்றில் வைத்து, இன்று விடியற்காலையில் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைதுசெய்யப்படும்போது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றுடனேயே கைதுசெய்யப்பட்ட நிலையில், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட யுவதியின் தாய், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், உடனடியாக கடத்தியவரை பொலிஸாரால் கைதுசெய்ய முடியாமால் இருந்த நிலையிலேயே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .