2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாத நபர்களினால் யாழ். வைத்தியசாலை விடுதி மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்.போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை வைத்தியர் ஓய்வு விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் ஓய்வெடுக்கும் அறை யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்று தெரியாது என்றும், இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X