2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நல்லூரில் மீன் மழை

George   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் மீன் மழை பெய்துள்ளது. மழை பெய்யும் போது பெருமளவான மீன்கள் மழையுடன் கீழே வீழ்ந்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகின்றது.

சுழல் காற்று மூலம் குளம் அல்லது கடலில் இருந்து நீர் மேல் எழும்பும் போது அதனுடன் நீரில் காணப்படும் மீன், தவளை உள்ளிட்டவையும் மேலெழும்பும்.

தொடர்ந்து, சுழல் காற்று மழையாக பெய்யும் போது நீருடன் உள்ளடங்கி சென்றவையும் மீண்டும் நிலத்தை வந்தடையும் என்பது மீன மழைக்கான விஞ்ஞான ரீதியிலான விளக்கம் ஆகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .