2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 14 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

முதலையொன்றைக் கொன்று இறைச்சியாக்கிய சந்தேகநபரை பொலன்னறுவை சோமாதிய தேசிய வனப்பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (14) பொலன்னறுவை வன விலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிலோகிராம் முதலை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மெதகிரிய தியசேனபுரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்; எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இது தொடர்பான மேலதிக விசாரணையை பொன்னறுவை வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .