2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மது போதையில் பாடசாலை மாணவர்கள்; நிக்கவெரட்டியவில் பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மதுபானம் அருந்திய நிலையில் போதையில் இருந்த ஆறு மாணவிகள் உட்பட 10 மாணவர்களை குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை சேர்ந்த மேற்படி மாணவ மாணவியர் 10பேரும் நிக்கவெரட்டிய, ஆலியாவ காட்டுப் பகுதியில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரை வரவழைத்து பொலிஸாரின் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Tuesday, 14 June 2011 09:03 PM

    தலைமைத்துவப் பயிற்சி வேண்டும் என்று பாடசாலை மாணவர்களும் கேட்கின்றனர் என்று கல்வித்துறை செயலர் கூறி இருக்கிறாரே, அதன் முன்னோடியோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .