2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 148 மாணவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

2010ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட  தமிழ்மொழி மூல பாடசாலைகளைச் சேர்ந்த  148  மாணவர்கள் இன்று வியாழக்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.  

புத்தளம்  கல்வி வலய தமிழ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு  விழாவானது,  புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை  அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பிரிவு  பிரதி  கல்விப்  பணிப்பாளர்  எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், ஏ.எச்.எம். ரியாஸ், எஸ்.ஏ.எஹியா  உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .