2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொலைச் சந்தேக நபர்கள் பதினேழு வருடங்களின்பின் கைது

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அகஸ்டின் பெர்னாண்டோ)

சிலாபம் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தின் அடிப்பில எனும் இடத்தில் 17வருடங்களுக்கு முன்னர் 72 வயதான பெண்ணொருவரை கொலை செய்ததாக கூறப்படும் மூவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

நீண்டகால தனிப்பட்ட பகை காரணமாக அப்பெண் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆயுதப்படைகளிலிருந்து தப்பியோடிய ஒருவரும் அடங்குவதாகவும் அவர் சிலாபம் குற்றப் புலனாய்வு பிரிவினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதகாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்ககளை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .