2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமடு பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த மதவாச்சிப் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதையல் தோண்ட உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .