2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளம் வைத்தியசாலைக்கு குவைத் உதவி

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

குவைத் நம்பிக்கை நிதியம் மற்றும் ஏயார் அராபி.கொம் அமைப்பு என்பன இணைந்து புத்தளம் குவைத் வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளுக்கான பொறுப்பையேற்றுள்ளனர்.

இன்று புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜக்கிய அரபு ராஜ்யத்தின் இலங்கை தூதரக இரண்டாம் நிலை செயலாளர் மற்றும் ஜாமியத்துல் சரீக்கா,  அமைப்புக்களின் பிரதிநிதிகள் உத்தியோக பூர்வமாக இப்பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை , புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் அவர்கள் வழங்கி வைத்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X