2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

அநுராதபுரம் மாவட்டத்தில் இயங்கும் சமூக நம்பி;க்கை நிதியத்தின் மூலம் பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.பீ.கிலாப்தீன் தெரிவித்தார்.

கெக்கிராவ, பளுகஸ்வௌ, கல்நேவ, நாச்சியாதீவு மற்றும் இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள், முன்பள்ளிகள், பாலங்கள், மதகுகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மகளிர் சங்கப் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .