2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தில்லையடி நகரில் தபாலகம் அமைத்து தருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

புத்தளம் நகரசபைக்குட்பட்ட தில்லையடி நகரில் தபாலகமொன்று அமைத்துக் கொடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தில்லையடி நகரில் மிக நீண்டகாலமாக தபாலகமொன்று இல்லாததால், இப்பிரதேச மக்கள் தமது தபால் மற்றும் ஓய்வூதிய, அவசர தந்தி உள்ளிட்ட தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அருகிலுள்ள பாலாவி மற்றும் புத்தளம் தபாலகங்களுக்கே செல்லவேண்டியிருப்பதாகவும் இதனால் தாம் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.

புத்தளம் தில்லையடி நகரில் உபதபாலகமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .