2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தம்புத்தேகமவில் சட்டவிரோத மணல் அகழ்வு

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தமுத்தேகம பிரதேச செயலகப் பிரிவின் பல கால்வாய்களிலிருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமுத்தேகம பிரதேசத்திலிருந்து கலாஓயா நோக்கிச் செல்லும் சகல கால்வாய்களிலிருந்தும் மணல் அகழ்ந்து சேகரிக்கப்பட்டு வேறு பிரதேசங்களுக்கு நீண்ட காலமாக திட்டமிட்ட ஒரு குழுவினரால் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேற்படி செயற்பாட்டினால் பிரதேச வளம் சுரண்டப்படுவதுடன் சுற்றாடலும் பாரியளவில் மாசடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .