2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகல், மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து 1,000 ரூபா இலஞ்சம் பெறும்போது இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஒன்றை செலுத்திய இராணுவ வீரர் ஒரவரிடம் அதற்காக சட்ட நடவடிக்கை மெற்கொள்ளாதிருக்கவே மேற்படி பணத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • risimb Sunday, 17 July 2011 09:59 AM

    "ஒருவர் மட்டுமல்ல'' [இலைமறை காயாக] வெளிப்படாத சிலர் உள்ளனர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .