2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம், ராஜாங்கனய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனய பொலிஸார் தெரிவித்தனர்.

முடி வெட்டுவதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில்  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .