2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதைமாத்திரை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
கலன்பிந்துனுவெவ நகரப்பகுதியில் போதைமாத்திரைகள் மற்றும் ஆபாசக்காட்சிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நகரப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் போதைமாத்திரைகள் மற்றும் ஆபாசக்காட்சிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியை வைத்திருந்த இளைஞர்கள் இருவரை கைதுசெய்யததாகவும் கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சானக த சில்வா தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் இருவரை சோதனையிட்டதாகவும் இவர்களிடமிருந்து 20 போதைமாத்திரைகளையும் ஒருவரிடமிருந்து ஆபாசக்காட்சிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சானக த சில்வா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • shajahan Sunday, 27 November 2011 07:46 PM

    எங்கே போகுது இந்த இளைஞர் உலகம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .