2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் பெண் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

முந்தல், அங்குனவில பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.பத்மாவதி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆனமடு - குருநாகல் வீதியில் தர்மபால என்னும் பகுதியிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்த பெண் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியால் வந்துகொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் அப்பெண் மீது மோதியதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த பெண் உடனடியாக ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, டிப்பர் வாகனத்தின் சாரதியை  ஆனமடு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான விசாரணையையும் பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .