2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


மஹிந்த சிந்தனையின் ஆயிரம் பாடசாலைகளினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள புத்தளம் பிகலி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இருமாடிகளுடன் அமைக்கப்படவுள்ள இவ் ஆய்வு கூடத்திற்காகவும், அதற்கான உபகரணங்களுக்காகவும் சுமார் 15 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிரின் அழைப்பினை ஏற்று வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கல்வி தினைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சாதனை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .