2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெந்தகடுவ  பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் மரணமடைந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடு - சிலாபம் வீதியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு  பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வண்டியொன்று  வீதியை விட்டு விலகிச்சென்று கொங்கிறீட் கம்பமொன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

தும்மலசூரிய, துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள்; சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பள்ளம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .