Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். ஹிஜாஸ்
பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து தப்பியதாக கூறப்படும் நபரை செவ்வாய்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் சிலாபம் - புத்தளம் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை முந்தல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறையில் வைக்கப்பட்டப் பின், கடந்த 2014ம் ஆண்டு ஒக்டோபர்; மாதம் 8ஆம் திகதி சிறையிலிருந்து தப்பிச்சென்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கெதிராக, 6 பிடியாணைகள் உள்ளதாகவும் புளிச்சாக்குளம் கிராமிய வங்கி திருட்டுடன் தேடப்பட்டு வந்தவரெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago