2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நாய்க்கடிக்கு வருடாந்தம் 2,400 பேர்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

இலங்கையில் வருடாந்தம் 2,400 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதாரக் கல்வி விருத்தி தாதி எம்.எச்.வீ.அதுல இந்திரஜித் தெரிவித்தார்.

நாய்க்கடிக்குட்பட்ட நபரொருவருக்குச் சிகிச்சையளிப்பதற்காக 35,000 ரூபாவிற்கு மேல் செலவாகுவதாகவும் இதற்காக அரசாங்கம் வருடாந்தம் கோடிக்கணக்கான பணத்தை செலவிடுவதாகவும் அவர் கூறினார்.

வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களிடமிருந்து சிறு பிள்ளைகளைப் பாதுகாப்பதன் மூலம் வருடாந்தம் நாய்க் கடிக்குள்ளாகும் சிறுவர்களின் தொகையையும்  குறைக்க முடியுமெனவும் எம்.எச்.வீ.அதுல இந்திரஜித் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .