2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

காஷ்மீரில், எட்டு வயது சிறுமி, ௯ட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், புத்தளம் தில்லையடியில், இன்று வெள்ளிக்கிழமை (20), ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

தில்லைடி மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த குறித்த கண்டன ஆர்ப்பாட்டம், புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின், தில்லையடி ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நசீர், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X