2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஆனமடுவ- ஆடிகம பிரதேசத்தில், நேற்று (07) இரவு  ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளாரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ சந்தியில், நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோதல் சம்பவத்தில்,  பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த மோதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X