2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் அட்டவில்லு சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று(31) மாலை கைது செய்யபப்ட்டுள்ளார்.

புத்தளம் அட்டவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண்ணிடமிருந்து 2 கிராம் 250 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .