2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பீபிள் லீசிங் கம்பனியின் இஸ்லாமிய நிதிப்பிரிவு கல்முனையில் திறந்து வைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)  

பீபிள் லீசிங் கம்பனியின் இஸ்லாமிய நிதிப்பிரிவின் கிளையொன்று கடந்த வெள்ளிக்கிழமை  கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.

அல் சபா என்ற பெயருடன் தனது சேவையினை விஸ்தரித்த பீபிள் லீசிங் கம்பனி,  மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைநகருக்கு வெளியில் கிழக்கில் தனது மூன்றாவது கிளையை கல்முனையில் திறந்துள்ளது.

திறப்பு விழா நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதிப் பணிப்பாளர் ஜயகொடி, பீபிள் லீசிங் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டி.பி.குமாரகே, பீபிள் லீசிங் பிரதி பொது முகாமையாளர் கே.எம்.எம்.ஜாபிர், மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் பி.வி.பத்திரன,  பீபிள் லீசிங் இஸ்லாமிய நிதிப்பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் இம்சுஸ் காமில் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பீபிள் லீசிங் நிறுவனம் மக்கள் வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும்.

alt
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .