2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியின் கிளை ஹம்பாந்தோட்டையில் திறப்பு

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.இஸட்.எம்.இர்பான்)


ஹம்பாந்தோட்டை, ருஹுணு மாகம்புர புதிய பரிபாலன நிர்வாக கட்டிட தொகுதியில் தேசிய சேமிப்பு வங்கியின் கிளையொன்று இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இது தேசிய சேமிப்பு வங்கியின் 291ஆவது கிளையாகும். இந்த கிளையின் ஊடாக ஹம்பாந்தோட்டை மக்களின் நீண்ட கால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கிளை திறப்பு விழாவில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் சுனில் .எஸ். சிரிசேன, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் ஆர்.சீ.த.சொய்சா மாவட்ட மேலதிக செயலாளர் டப்லியூ.எ.தர்மசிரி, மாவட்ட உதவி செயலாளர் ஹிமாலி ரத்னவீர, ஹம்பாந்தோட்டை மேயர்  எராஜ் ரவீந்திர பிரனாந்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X