2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நெல்லியடியில் இலங்கை வங்கியின் புதிய கட்டடம்

A.P.Mathan   / 2014 மார்ச் 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கர்ணன்


யாழ். நெல்லியடி நகரில் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வங்கியின் கட்டடத்தொகுதி எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த கட்டடத்தொகுதியினை இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் டி.எஸ்.குணசேகர திறந்து வைக்கவுள்ளார்.

வடமராட்சியில் முதன்முதலாக பாதுகாப்புப் பெட்டக வசதிகள் இந்த வங்கிக்கிளையில்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர் எம்.எஸ்.முதியான்சே, நெல்லியடி பிரதேசத்தின் வர்த்தக தலைவர் எஸ்.அகிர்ததாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .