2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


கடந்தவார பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்களை பொறுத்தமட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் பதிவாகிய உயர்ந்த புரள்வு பெறுமதியாக 3 பில்லியன் ரூபாவை கடந்து பதிவு செய்திருந்தது. மாகாண சபை தேர்த்தல்கள், ஐ.நா.வின் ஜெனீவா தீர்மானம் போன்றன கடந்த வார பங்குச்சந்தை நிலைவரங்களில் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பங்குச்சந்தை நடவடிக்கைகளில் சீரான முறையில் இடம்பெற்றிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,972.17 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3278.67 ஆகவும் பதிவாகியிருந்தன.

மார்ச் 24ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 6,290,380,099 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 19,160 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 18,230 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 930 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி குறைவாகவே அமைந்திருந்தது. வங்கித்துறையை சேர்ந்த பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு பதிவாகியிருந்தது. ஹேகார்ப் பங்குகள் மீது நிறுவனசார் ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து பங்குகள் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை
பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, அலையன்ஸ் ஃபினான்ஸ் கம்பனி மற்றும் Nனுடீ கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியன உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகள் மீது உயர் ஈடுபாடு காணப்பட்டது. வங்கித்துறையை சேர்ந்த பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமை பங்குகள் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

புதன்கிழமை
பெருமளவான உறுதியான பங்குகளின் விலைகளில் தளம்பல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, ஏற்றத்தாழ்வுகள் பங்குச்சந்தை நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்த போதிலும், புரள்வு பெறுமதி 700 மில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லங்கா டைல்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. பான் ஏசியன் பவர், பிரமல் கிளாஸ் மற்றும் எஸ்எம்பி லீசிங் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. இதேவேளை, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது வெளிநாட்டவர்களின் ஈடுபாடு அதிகம் காணப்பட்டது.

வியாழக்கிழமை
சுமார் ஐந்து வாரங்களின் பின்னர் புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. இதில் தேசிய அபிவிருத்தி வங்கியின் நான்கு மொத்த கைமாறல்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. அ.ப.வி.சு மொத்தமாக 41.65 புள்ளிகளால் அதிகரித்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செலான் வங்கி பங்குகள் மீது உயர்ந்த மட்ட ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
சிலோன் டொபாக்கோ பங்குகளின் விலைச் சரிவு காரணமாக பரந்தளவில் சந்தை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்த போதிலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்திருந்தமையால் பிரதான சுட்டி உயர்வடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது உயர் ஈடுபாட்டின் காரணமாக, புரள்வு பெறுமதி 3 பில்லியனை கடந்திருந்தது. ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகிய பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு பதிவாகியிருந்தது. பிரமல் கிளாஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் AMF கம்பனி லிமிடெட், செரன்டிப் லான்ட், சிமானெக்ஸ், மஹாவெலி பீச் மற்றும் செரன்டிப் என்ஜி. குரூப் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஜி எஸ் ஃபினான்ஸ், SMB லீசிங் (சாதாரண), ஆசிரி சேர்ஜிகல், ஒஃவிஸ் எக்யுப்மன்ட்ஸ் மற்றும் அஸ்கொட் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,200 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த வார பெறுமதியை விட இந்த வாரம் தங்கத்தின் விலை மேலும் சற்று வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.11 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 220.17    ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .