2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தாண்டு நெருங்குவதை தொடர்ந்து பங்குச்சந்தை சரிவு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்திருந்தது, சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்ததுடன், புரள்வு பெறுமதி 500 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மொத்தமாக கைமாறியிருந்தன. இது புரள்வு பெறுமதியின் 38 வீதத்தை பங்களிப்பு செய்திருந்தது. லங்கா ஐஓசி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டது. ஏசியா அசெட் ஃபினான்ஸ் பங்குகள் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாடு காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்கள் கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளை கொள்வனவு செய்வதில் அக்கறை செலுத்தியிருந்தனர்.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது, சந்தையின் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (கொமர்ஷல் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.43 வீதத்தால் அதிகரித்திருந்தது. கொமர்ஷல் வங்கி; பங்கொன்றின் விலை மாற்றமின்றி 125.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,614,934 பங்குகளால் அதிகரித்திருந்தது.

பன்முகத்துறை என்பது, சந்தையின் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.13 வீதத்தால் அதிகரித்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 3.30 ரூபாவால் (1.42%). அதிகரித்து 236.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 52,139 பங்குகளால் அதிகரித்திருந்தது. எயிட்கன் ஸ்பென்ஸ் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 98.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் பைரஹா ஃபார்ம்ஸ் ஆகியனவும் புரள்வு பெறுமதியில் பங்களிப்பை வழங்கியிருந்தன. லங்கா ஐஓசி பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் அதிகரித்து 39.90 ரூபாவாக பதிவாகியிருந்தது. பைரஹா ஃபார்ம்ஸ் (1.02%) பங்கொன்றின் விலை 1.50 ரூபாவால் குறைந்து 144.90 ரூபாவாக பதிவாகியிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .