2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முயற்சியில் நம்பிக்கையுள்ளவரை அரவணைத்த Dialog Mega அதிர்ஷ்டம்

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, களுபஹன டிவிஷனைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராஜா ரவீந்திரனுக்கு Dialog Mega அதிர்ஷ்டம் மூலம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. Dialog Mega அதிர்ஷ்டத்தின் மூலம், ரூபாய் 10 இலட்சத்தை வெற்றி கொண்ட நாகராஜா ரவீந்திரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.   

“எனக்கு எப்போதுமே அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. உழைத்தால்தான் வயிற்றுக்கு உணவு கிட்டும் என்ற கொள்கையிலேயே வாழ்ந்தவன் நான். ஆனால், இப்படியிருந்த எனக்கு Dialog Mega அதிர்ஷ்டம் கிட்டியதும்தான், அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராமல் கிட்டுவது என்ற உண்மையைப் புரிந்துக் கொண்டேன்.   

“ஒருநாள், எனது கைப்பேசிக்கு ‘மெஸேஜ்’ ஒன்று வந்திருந்தது. அதில், Dialog Mega அதிர்ஷ்டத்தை வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான் இதை அப்போது பெரிதாக நம்பவில்லை. மனைவியிடமும் இந்த விடயத்தைக் கூறினேன். எதற்கும் உறுதிசெய்து கொள்வோம் என முடிவெடுத்து, 121 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டேன். நான், ரூபாய் பத்து இலட்சத்தை வென்றிருப்பதாக, Dialog Mega நிறுவனத்தினர் உறுதி செய்தனர். மறுநாள் Hot line இல் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது தேசிய அடையாள அட்டையின் ‘போட்டோ கொப்பி’ ஒன்றை ஈமெயில் பண்ணுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுநாள் கொழும்புக்குச் சென்று பணப்பரிசைப் பெற்றுக்கொண்டேன்.   

“அந்தப் பத்து இலட்ச ரூபாய் பணத்தில், முதலில் முச்சக்கர வாகனம் ஒன்றை வாங்கினேன். மிகுதிப் பணத்தில் கடன்கள் சிலவற்றை அடைத்தேன். அத்துடன், கோயில் அன்னதானம் ஒன்றையும் வழங்கினேன். எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகின்றன. நான்கரை வயதில் ஒரு மகள் உள்ளார். மனைவி ஒன்பது மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.   

“Dialog Mega அதிர்ஷ்டசாலியாக வெற்றி பெற்றுள்ளேன் என்பதை அயலவர்களிடமும் தொழில் செய்யும் இடத்திலும் கூறியபோது, யாருமே நம்பவில்லை. ஆனால், உண்மை உறுதியான பின்னர், எல்லோரும் எவ்வாறு இப்போட்டியில் கலந்து கொள்வதெனக் கேட்டுத் தெரிந்து கொண்டு, Dialog ரீலோர்ட் செய்யத் தொடங்கி விட்டனர். இதில் விசேடம் என்னவென்றால், நமது தொழிற்சாலையில் வேலை செய்கின்ற இந்திய நாட்டவர்கள், இதுவரை வேறு ‘சிம்’ கார்ட்களையே பாவித்து வந்தனர். ஆனால், எனது வெற்றியை அடுத்து அவர்களும் ‘Dialog சிம்’ பாவிக்கத் தொடங்கிவிட்டனர்.   

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல், எல்லோரும் ‘Dialog சிம்’ பாவித்து ரீலோட் செய்தால், உங்கள் முயற்சி என்றாவது வெற்றியைக் கொண்டு வந்து தரும். ‘ரீலோர்ட்’ செய்யும் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை மறவாதீர்கள்” என நாகராஜா ரவீந்திரன் தன்னை Dialog Mega அதிர்ஷ்டம் அரவணைத்த விடயத்தைப் பெருமையுடன் கூறினார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X