2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் குடாநாட்டில் மத்திய வங்கியின் கிளை திறந்துவைக்க ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிராந்தியக் கிளைகள் யாழ் குடாநாட்டிலும் திருகோணமலையிலும் திறந்து வைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
 
அடுத்த ஜுலை  மாதத்தில் இவ்விரு பகுதிகளிலும் பிராந்தியக் கிளைகள் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

மத்திய வங்கியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக   அநுராதபுரம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில்  ஏற்கனவே பிராந்தியக் கிளைகள்  திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறு பிராந்தியக் கிளைகளை நிறுவுவதன் மூலம், வாடிக்கையாளர்களுடன் சிறந்த உறவுகளைப் பேணக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X