2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.

இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் உலாவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அண்மையில் அந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்களை மக்கள் மத்தியில் பரப்பவிட்டமையால் அதை உண்மையென நம்பியவர்கள் அப்புகைப்படத்தை கத்தரித்து தங்களுடைய பூஜை அறையில் வைத்து வழிபடுமளவுக்கு நிலைமை மாறியிருந்தது.

எந்தவொரு செய்தியையும் ஆராய்ந்து அறியாமல் முறையற்ற தனமாக மக்கள் மத்தியில் போலிகளை பரப்புவதால் ஏமாற்றப்படுபவர்கள் வாசகர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மதங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10 தலை நாகம் என போலியாக சித்திரிக்கப்பட்ட, உண்மையான 'ஒரு தலை' நாகத்தின் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு தலை நாகத்தின் புகைப்படத்திற்கு 10 தலை கொடுத்தவர்கள் கணினி விற்பன்னர்களே...!

ஏமாற்றமடைந்த வாசகர்களுக்கு உண்மைநிலை புரியவேண்டும் என்பதற்காக 10 தலை நாகத்தின் 'கிரபிக்ஸ்' விளையாட்டை இங்கே பிரசுரிக்கின்றோம். இப்படத்தில் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதனுடைய நிழல் அப்படியே இருக்கும். அதே படத்தை 10 தலைகளாக மாற்றியபோதும் அதே ஒரு தலை நாகத்தின் நிழல் தென்படுவதை வாசகர்களின் கவனித்திற்காக விடுகின்றோம். (நன்றி: பேஸ்புக் நண்பர்கள்)


You May Also Like

  Comments - 0

  • mohamed-macars Tuesday, 14 December 2010 07:12 AM

    இன்னும் அறியாமைக்கால மக்களாக இருப்பதையிட்டு கவலை அடைகிறேன்

    Reply : 0       0

    Tilak Tuesday, 14 December 2010 07:27 PM

    10 தலை கொண்டதாக கூறப்படும் பாம்பின் பின்னாலுள்ள நிழலில் ஒரு தலை மாத்திரம் தென்படுவதையும் கவனிக்காமல் வாசகர்களை ஏமாற்றும் ஊடகங்களை என்னவென்பது?

    Reply : 0       0

    vaharan Wednesday, 15 December 2010 01:18 AM

    இதே முறையில் கடந்த பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட அனுபவம் வன்னியில் உள்ளோர்க்கு உண்டு.

    Reply : 0       0

    tamilsalafi.edicypages.com Wednesday, 15 December 2010 12:51 PM

    புகை படங்கள் , வீடியோக்கள் சாட்சியாக கொள்ளக் கூடாது என்பதற்கு இவைகள் ஒரு சாட்சி. இன்று கண்ணால் கண்டவர்களின்சாட்சியங்களை விடவும் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும்,
    நீதி மன்றங்ககளில் கூட முன்னுரிமை கொடுக்கப் படுகிறது.
    எந்த லீக்ஸ் உம் எதனை லீக் பண்ணினாலும் நேரடி சாட்சியங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழ் சலபி

    Reply : 0       0

    gowthrika Wednesday, 15 December 2010 05:25 PM

    உலகில் இன்று பொய் தான் அதிகம், அதில் இதுவும் ஒன்று. ஏமாற ஆட்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றும் கூட்டமும் இருப்பது இயல்பு தானே .

    Reply : 0       0

    packiam Thursday, 16 December 2010 12:01 AM

    எதையும் சிந்திக்காமல் ஏமாறும் மனிதர் பலர் உண்டு. ஏமாறும் மனிதர் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதரும் இருப்பர் .உண்மையை பொய் என்றும் பொய்யை உண்மை என்றும் நம்பி அழிந்து போfpwhன். கடவுள் இருக்கின்றான் .அவன் யார் என்று மனிதா நீ தேடு கடவுளை நேசிப்பவன்

    Reply : 0       0

    graphics Friday, 17 December 2010 07:13 AM

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று முன்னவர்கள் சும்மாவா சொன்னார்கள் !!!!!!!!!!

    Reply : 0       0

    shanjeev Thursday, 23 December 2010 03:13 AM

    எமது மக்களிடையே இருக்கும் மூட நம்பிக்கையை மெருகூட்டும்செயல் தான் இது. இணையங்கள் நல்லதும் செய்கின்றது கெட்டதும் செய்கின்றது....

    Reply : 0       0

    asker Saturday, 25 December 2010 07:11 PM

    இறைவனுக்கு உருவம் இல்லை ,இறைவன் ஒருவன். -பகவத்
    கீதை

    Reply : 0       0

    puttalam mainthan Friday, 07 January 2011 06:14 PM

    eppasi oru samugam entha ulagathil erukutha saryana mosam entha makkal eppolothu thirunthuvaargal mooda nambika kondavrgale satru sithiyungal plz update u r brain

    Reply : 0       0

    imran Friday, 28 January 2011 03:39 PM

    இறைவனுக்கு உருவம் இல்லை மற்றும் அவனுக்கு நிகராக எதுவும் இல்லை (அல் குர்ஆண்)

    Reply : 0       0

    KOHILAN Saturday, 11 June 2011 08:42 PM

    இவ்வாறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேன்டும், முட்டாளாக்க நினைப்பவர்களே முட்டாள்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .