2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சடலங்களை இறக்குமதி செய்யும் குரோஷியா

Kogilavani   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குரோஷியா நாடு மனிதர்களின் சடலங்களை  இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

குரோஷியாவிலுள்ள பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களுக்கு பரிசோதனைக்காக சடலங்கள் தேவைப்படுகின்றதாம்.

சடலங்களை ஆய்வுகளுக்காக வழங்கும் கலாசாரம் குரோஷியாவில் குறைவாக உள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து பிரேதங்களை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது.

ஸெக்ரம் நகரிலுள்ள  கே.பி.சி. வைத்தியசாலை அமெரிக்க நிறுவனமொன்றினூடாக 11 சடலங்களை இறக்குமதி செய்துள்ளது.

அந்த வைத்தியசாலை ஒரு சடலத்திற்கு 1000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக குரோஷிய  பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


-


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X