2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிர்வாணமாக தபால் விநியோகித்த ஊழியர் நெருக்கடியில்

Kogilavani   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு பெண்ணை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நிர்வாணமாக தபால் விநியோகத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 52 வயதுடைய இந்நபர், விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள வைட்பிஷ் பே எனும் நகரத்திலுள்ள ஒரு பெண்ணுடன் தொடர்புகொண்டு அப்பெண்ணின் அலுவலகத்திற்கு தான் நிர்வாணமாக வந்து தபால் விநியோகம் செய்யப்போவதாக அறிவித்தாராம்.

பின்னர் கடந்த 4 ஆம் திகதி அவர் வெறும் புன்னகையை மட்டுமே 'அணிந்து' அப்பெண்ணின் அலுவலகத்தில் தபால்பொதியொன்றை விநியோகித்தார் என நியூஸிலாந்து பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களின்பின், தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்  மேற்படி தபால் ஊழியர் பொலிஸாரால் கைது  செய்யப்பட்டார்.

அப்பெண்ணை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  அப்படி நடந்துகொண்டதாகவும் இது மிக முட்டாள்தனமான நடவடிக்கை என  விசாரணையின்போது அந்நபர் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Wednesday, 22 December 2010 08:53 PM

    என்ன உலகமடா இது . அண்மைக் காலமாக நிர்வாணம் என்று ஒரு ஆடை இல்லாத கலாச்சாரம் நடமாடுகிறது. வெட்கத்தை மனிதர்களில் இருந்து அகற்றி விட்டால் அந்த மனிதனைக் கொண்டு எதனையும் சாதித்து விடலாம். ஏனெனில், வெட்கம் இல்லாதவன் எதுவும் செய்வான். நிர்வாணமாக வீதியில் அலைவதற்கு சட்ட ரீதியாக அனுமதி கேட்டு ஒரு ஆர்பாட்டம் விரைவில் நடைபெறலாம். ஓரின சேர்க்கை போன்று ???

    Reply : 0       0

    riyaz Friday, 24 December 2010 01:01 AM

    மானம் கெட்ட உலகில் வாழும் இன்னொரு மானம் கெட்ட மனிதன்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 25 December 2010 09:50 PM

    உன்னை இலவசமாக சந்தோசப்படுத்த ஆடையை களையவா என்று கேட்டானா?
    அவனுடைய நாட்டில் அதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பாள் ஆனால் இங்கு செருப்படி அல்லவா கிடைக்கும்.
    தனிமையில் கூட அதை செய்ய மறுக்கும் மனைவியர் உள்ள நாடல்லவா எங்கள் நாடு!
    ஓரினச்சேர்க்கை செய்வதற்கென்றே ஒரு தீவு உண்டு அவர்கள் அங்கே போய் உடை உடுக்க முயற்சித்தால் நையப்புடைக்கப்படுவர்
    ஜப்பானில் குளிக்குமிடங்களில் நிர்வாணமாக குளிக்கின்றனர். சைனர்கள் துறவிகள் நிர்வாணமாக ஊர்வலம் போகின்றனர் ராஜஸ்தானில் கங்கை ஸ்நானம் செய்யும் இந்து துறவிகளும் உண்டு, ஒரு நாளில்.

    Reply : 0       0

    niro Sunday, 26 December 2010 06:15 AM

    மிஸ்டர் சின்த்க்சொன் உங்களுக்கு நல்ல நிர்வான அறிவு உள்ளது போல் தெரிகிறது இல்லையா?

    Reply : 0       0

    xlntgson Sunday, 26 December 2010 08:33 PM

    niro, நன்றி, கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு. நிர்வாணத்தைப் பற்றிய செய்தியானமையினால் எழுதினேன். விசேடம் இல்லை, இதற்கெல்லாம் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்பதும் இல்லை. நேரங்கிடைக்கும் போதெல்லாம் எழுதி வைக்கின்றேன். பலன் பெற்றவர்கள் நன்றி கூற, இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நானே மீண்டும் படித்து பார்த்து சிரித்துக் கொள்வேன். வேறொன்றும் இல்லை. சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை!
    கருத்துகள் யாரையும் புண்படுத்தாவகையில் அறிவுபூர்வமாகவோ நகைச்சுவையாகவோ இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
    (எக்செலன்ஜீசன்@குகள்)

    Reply : 0       0

    imran khan Tuesday, 28 December 2010 03:43 AM

    நாகரீகம் என்பது ஆள் பாதி ஆடை பாதி என்பதுதான், ஆனால் அந்த நாட்டில் ஆடை கூட இல்லாமேல் இருந்தால் எப்படி நாகரீகம் முழுமை அடையும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .