2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’இந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா?’

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“ரயில் கடவை காப்பாளர்களிற்கு புதிய ஆட்சியிலாவது தீர்வுகள் கிடைக்கவேண்டும்” என,  வடக்கு - கிழக்கு ரயில் கடவைகாப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாடு முழுவதும் 2,064 ஊழியர்கள் ரயிர் கடவைகாப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றனர். எமது பணிக்கான நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் வெறும் 250 ரூபாய் சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு எமது குடும்ப வாழ்க்கையை கடந்த 7 வருடங்களாக நகர்த்தி வருகிறோம். எமக்கான நிரந்தர நியமனம், மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கடந்த அரசிற்கு பலமுறை தெரிவித்தும் அது தீர்க்கபடாமல் அடிமைகளை போலவே நாம் நடத்தப்பட்டோம். 

“எமக்கான தொழில் பாதுகாப்பு இல்லாத நிலையில்  நேற்று முன்தினம் கூட கட்டன் மல்லிகைபூ பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடமையின் போது ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இது போல வருடாவருடம் விபத்துளும் மரணங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இதுவரை பல ஊழியர்கள் கடமையின்போது விபத்தில் சாவடைந்துள்ளனர்.

“இந்நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஆட்சியில் நாடு சுபீட்சமடைந்து,மக்களுக்கான விடுதலை கிடைத்து அடிமைப்படுத்தப்பட்டு, அரசியல் பழிவாங்கலிற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்புகிறோம். 

“நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கூறியிருந்தோம்.அவர் எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்பதாக வாக்குறுதி அழித்துள்ளார். எனவே தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் எமக்கு வாக்குறுதி அளித்தபடி எமக்கான தீர்வினை பெற்றுதரவேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு” என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X