2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட 4 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலக்ஸ்ராஜா நேற்று உத்தரவிட்டார்.

இலுவைப்படகு ஒன்றின் மூலம் நான்கு இராமேஸ்வர மீனவர்கள், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்ப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் வயது குறைந்த சிறுவர் தொழிலாளியும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டப்பின்னர், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 இதன்போது, குறித்த 4 மீனவர்களில் 3 பேரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை 21ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X