2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உபகரணங்கள் வழங்கல்

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் மேசன் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (22) நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாட்டில், மேசன் வேலையாளர்களை வலுப்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக  கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இதன்போது, 156 பேருக்கு இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .