2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு கொடுக்க முடியாது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளையும் கடற்படையினருக்கு கொடுக்க முடியாது. அதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று திங்கட்கிழமை (19) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, “முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர். அதனை கடற்படையினருக்கு வழங்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாலருக்கு, பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என  தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையடுத்து, எஸ்.சிவமோகன் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர். இதனைச் சுவிகரிக்கும் நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அளவீடு செய்ய முற்பட்ட போது மக்கள் எதிர்ப்பினால் நில அளவீடு கைவிடப்பட்டது.

செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி பொலிஸாரின் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சமயம் அன்றைய தினமும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனையடுத்து, குறித்த காணியை கடற்படையினருக் கு சுவீகரிப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமும் அதற்கான அனுமதிகள் வழங்கப்படாது எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேவேளை, திங்கட்கிழமை (19) அதனை அளவீடு செய்வதற்கான அறிவுறுத்தல் பாதுகாப்பு அமைச்சினால் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூட்டத்தில் கூறப்பட்டது.

இதனையடுத்து,  அவ்விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன், “இதில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில் உள்ளன. அத்துடன் இதனை கடற்படையினருக்கு கொடுப்பது என்பது ஒட்டுமொத்த கடற்றொழில் வளத்தையும் கொடுப்பதற்கு சமனாகும். எனவே, தனியாருக்கு சொந்தமான 358 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அதேவேளை, இதில் உள்ள அரச காணிகள் கடற்தொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும். கடற்படைமுகாம் முற்றாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவேண்டும். இது தொடர்பில் நான்நாடாளுமன்றில் விவாதித்துள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .