2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒட்டுச்சுட்டானில் யானைகளின் தொல்லை அதிகம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூலை 16 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில், தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா்

 
கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ஆம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும் யானைகளின் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். 
 
பயன்தரு தென்னை, பலா, மா மரங்கள் உட்பட அனைத்து மரங்களையும்  யானைகள் மாலை 4.00 மணியளவில் கிராமங்களுக்குள் புகுந்து அழித்து வருவதாகவும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் யானைகளின் தொல்லை தொடர்பாக பொது மக்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 
 

இதேவேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் நடமாட்டம் காரணமாக மாலை 4.00 மணியுடன் மக்கள் பயணிப்பதில் அச்சங்கொண்டு உள்ளனர். மேழிவனம், கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, அம்பகாமம் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லை காணப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .