2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘குளங்களின் நீ​ர் மட்டம் குறைகிறது’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களின் நீர்மட்டமும், என்றுமில்லாதவாறு குறைவடைந்துள்ளதாக, பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

“இதற்கமைய,  இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 2 அடி 3 அங்குலமாகவும், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 10 அடி அங்குலமாகவும், கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் 5 அடி 6 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம் 2 அங்குலமாகவும், குடமுறுட்டிக்குளத்தின் நீர்மட்டம் 4 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளத்தின் நீர் மட்டம் 3 அடி 3அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3 அடி 2 அங்குலமாகவும், புதுமுறிப்புக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி 5 அங்குலமாகவும், கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 4 அடியாகவும் காணப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .