2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனை: இருவர் கைது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில், சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை, புதன்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 18 சாராய போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கிளிநொச்சி பகுதி மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .