2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீல் வைக்கப்பட்ட வைத்தியசாலை சோதனைக்குட்படுத்தப்பட்டது

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டவிரோத கருக்கலைப்புச் செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையை யாழ்ப்பாணம் சட்டவைத்தியதிகாரி சி.மயூரதன், கிளிநொச்சி சட்ட வைத்தியதிகாரி என்.ஜி.எம்.ஜெயவர்த்தன மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (12) சோதனை நடத்தினர்.

சிறுமியொருவருக்கு சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புச் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மேற்படி தனியார் வைத்தியசாலை சீல் வைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலையை சட்ட வைத்தியதிகாரி நடத்தி வந்தார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பம் தரித்து, அந்த கர்ப்பத்தை மேற்படி தனியார் வைத்தியசாலையில் கலைத்துள்ளார். இதனால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்தமை தொடர்பில் பொலிஸாரிடம் மேற்படி சிறுமி வாக்குமூலமளித்திருந்தார். அதற்கமைய மேற்படி தனியார் வைத்தியசாலையின் வைத்தியரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், அவரைக் நேற்றுத் திங்கட்கிழமை (11) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போதே, தனியார் வைத்தியசாலையை சீல் வைக்க உத்தரவிட்ட நீதிவான், வைத்தியரைப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X