Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் 5 வாடிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணியினரின் ஒழுங்கமைப்பில் தியாகி அறக்கொடை நிறுவனம், மண் வாசனை அமைப்பு மற்றும் மனித நேயச் செயற்பட்டாளர்களின் உதவியுடன் மீளமைத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேற்று (16) கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தம்பிஐயா, முல்லை மாவட்டச் செயலாளரும், இளைஞர் அணியின் மத்திய குழு உறுப்பினருமான திலகநாதன் கிந்துஜன், முல்லைமாவட்ட அமைப்பாளர், இளைஞர் அணிச்செயற்பாட்டாளர் விஸ்ணு மற்றும் கட்சியின் முல்லை மாவட்டச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
8 hours ago