2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தூய்மையற்ற குடிநீர் விநியோகம் தொடர்கிறது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் விநியோகிக்கப்படும் குடிநீர், சுத்தமற்று இருப்பதாக அதிகாரிகளிடம், மக்களால், முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கராயன் மத்தியில் இருந்து கெங்காதரன் குடியிருப்பு, இம்மாஸ்நகர் உட்பட அக்கராயன் மேற்குப் பகுதிகளுக்கும் குடிநீர் தற்போது விநியோகிக்கப்படுகின்றது.  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் 2011ஆம் ஆண்டில், அக்கராயனில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு முன்னால்,  அமைக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கியில்  மேல் பகுதி பாதுகாப்பற்று இருப்பதன் காரணமாக, குரங்குகள், பறவைகளின் எச்சம் குடிநீருடன் கலப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமங்களில் வசிக்கும் 600  குடும்பங்கள், இந்த குடிநீர் விநியோகத் திட்டத்தில் பயன்பெறுவதுடன், அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .