2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பில் வாளுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் வாளுடன் திரிந்த நபரொருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் வாளுடன் இளைஞர்கள் திரிவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது 25 வயதுடைய 5ஆம் வட்டாரம் இரணைப்பாலையைச் சேர்ந்த குறித்த நபரை வாளுடன் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் நாளை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X